Monday, November 9, 2009

கொஞ்ச நாள் பொறு தலைவா..

'
'



பதிவுலகத்திற்கு இன்றிலிருந்து விடுப்பு..

.

Thursday, October 29, 2009

உள்ளுரசும் நினைவு

தேயத் தேய நடந்தாலும்
தேய்ந்த பின்னும்
மிஞ்சுகிறது..
உன் நினைவு போல
பாத ரேகை..

************"************"************"*************"*****

பெஷாவரில் குண்டுவெடிப்பு..
ஆள் தோட்ட பூபதி நானடா..
மானாட..
மச்சி சொல்லு மயிலாட..
ஆணியே புடுங்க வேணா..
முதலையின் முதுகில் ட்ரான்ஸ்மிட்டர்..
நறுக்கிய வெங்காயம் ஒரு கப்..
எத்தனை தாவினாலும்

வெயில் நேர மின்விசிறியால்
விரட்ட முடியாத
வியர்வை பிசுபிசுப்பாய்
உன் நினைவு..

************"************"************"*************"*****

உன்னிடம் பேச நினைத்த
பேச்சுக்களெல்லாம்
உள் நாக்கில்
தூக்கு போட்டு
தொங்கிக் கொண்டிருக்கிறதே..
எப்போது துப்புவது?
எப்படி துப்புவது?

************"************"************"*************"*****

காய இருந்த துணி
ஆற்று மண்ணில் விழுந்தால்
உதறி காய வைக்கலாம்
கரிசல் மண்ணில் விழுந்தால்
அலசி காய வைக்கலாம்

கன்னி மனதில் விழுந்தால்
கறையோடு தான்
கட்டிக் கொள்ள வேணும்

************"************"************"*************"*****

நண்பன் சொன்னான்
உன்னை பிரிந்த பின்புதான்
என் முகம் பொலிவிழந்ததாய்..
அவனுக்குத் தெரியாது
உன் நிழலை
நான் சுமப்பது..

.

Monday, October 19, 2009

ஒரு காத்திருத்தலின் போது..

பழ கடைக்காரரின்
ஆர்வப்பார்வை
உதறி திரும்பினேன்..

வலப்பக்கம்
மகளுக்கு
மானாவாரியாய்
ஆலோசனைகளை
வழங்கும் வயதான தாய்..

இடப்பக்கம்
இந்திய ஜனநாயகத்தை
சரிபார்த்துக் கொண்டு
இருவர்..

இவர்களையெல்லாம்
சரி பார்த்துக்கொண்டு
நான் ?

பேருந்தின்
பேரிரைச்சலுக்கு
பின் கேட்டது
சிறகு விரித்த
சிரிப்புகள் சில..

பேருந்து நிறுத்தத்தில்
மண்பானைத் தண்ணீரா
தாகத்திற்கு பருகினேன்..

ஐந்து பறவைகளில்
அவளொரு ஆச்சரியம்
ஒவ்வொரு நொடியும்
உயரும் அழகு..

சிந்தனையின்
சிறகு பறித்து
கற்பனைக்கு
கடன் தந்தாள்..

சில நொடியில்
விழி சுழற்றி
வழி மறித்தாள்
அவள்
விழிவழி
கொஞ்சம் உலகம்
பார்த்தேன்..

இப்போதும்
பேருந்து வந்தது
ஆனால்
தென்றாலாய் நகர்ந்தது..

இப்போது நிறுத்தத்தில்
நான்
காலி மண்பானை
பழக் கடைக்காரரின்
பரிகாசப் பார்வை..

-- 06/04/2000
(பழைய டைரியின் பரிகாசம்)


.